Saturday, 1 October 2011

என் வாழ்க்கை பயணம்

ஊதாங்குழல் பேய்

எனக்கு நினைவு தெரிந்து பொதுவாழ்வில் முதல் அனுபவமாக ,நான் 3வது படிக்கும் போது நிகழ்ந்தது,என் நண்பனும் நானும் மதியம் 1மணிக்கு பள்ளி முடிந்து சாப்பாட்டு தட்டு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் போது நண்பன் திடிரென மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டான் எழுப்பி பார்த்தேன் எழுப்ப முடியவில்லை ஊருக்குள் ஒடி வந்து அழுதுகொண்டே கூறிய போது ஊரே,"அய்யய்யோ!!என் மகனை ஊதாங்குழல் பேய் அடித்து விட்டது"என்று அலறி அடித்துக்கொண்டு ஒடி வந்தது இன்றளவும் என் மனதில் இருந்து நீங்கவில்லை!!!

திருடன் என்று பட்டம்

நம்மில் பலருக்கு இந்த தொடர் பழைய நினைவுகளை அருமையாக அசைபோட வைக்கிறது என நினைக்கின்றேன் .தொடரட்டும் நினைவு அலைகள் !!
நான் நான்காவது படிக்கும் போது ஒரு சுவையான நிகழ்ச்சி ,பள்ளியில் எதற்கோ ஒரு டப்பாவில் காசு போட்டு சேர்த்து வைத்திருக்கிறார்கள் ,அந்த டப்பாவில் காசு தான் இருக்கிறது என்று எனக்கு தெரியாது ,சக மாணவி ஒருவர் ஆசிரியர் எனக்கு கொடுத்தார் பார் என்று அந்த டப்பாவை ஆட்டி ஆட்டி காட்டினால் ,அதன் மேல் எனக்கு ஆசை வந்துவிட்டது ,யாரும் பார்க்காத சமயத்தில் அந்த டப்பாவை எடுத்து வந்து விட்டேன் பிறகு பார்த்தால் அது முழுக்க காசு இருக்கிறது ,பயந்துபோய் பக்கத்து வீட்டில் பதுக்கி வைத்து விட்டேன் .பள்ளியில் கேட்டபோது சொல்வதற்கு பயம் ,அதனால் சொல்லவில்லை ,அவ்வளவு காசுகளையும் அப்போது எனக்கு செலவு பண்ணவும் தெரியாது ,அதை பார்த்து பார்த்து பயம் வேறு வந்தது விட்டது ,ஒரு வழியாக சக மாணவியிடம் சொல்லி ஆசிரியர்களுக்கு தெரிந்து ,வீட்டில் அடிவாங்கி ,பள்ளியில் திருடன் என்று பட்டம் வாங்கி நான் அனுபவித்ததை நினைத்தால் இன்றும் அவமானமாக இருக்கிறது .

No comments:

Post a Comment