Saturday, 8 October 2011

நார்த்தம் மிட்டாய்

எனது தந்தையார் அண்ணா மீதும் பெரியார் மீதும் மிகவும் பாசம் கொண்டவர் ,ஒருமுறை அவர்கள் பிறந்தநாளும் என் பிறந்த நாளும் செப்டம்பர் 17  அன்று எங்கள் பள்ளிக்கு மிட்டாய் கொடுக்க வந்தார்கள் ,மாணவர்கள் எல்லோரும் அவரை சூழ்ந்தது கொண்டு மிட்டாய் வைத்திருந்த தட்டை பிடுங்க முயற்சிக்கிறார்கள் .அப்போது அவர் புதிதாக எடுத்து போட்டுக்கொண்டு வந்த சில்க் சிப்பா கிழிந்தது விட்டது ,அப்போதெல்லாம் நார்த்தம் மிட்டாய் என்று கூறுவார்கள்,அதை நினைத்தால் இப்போதும் என் அப்பாவின் அந்த சில்க் சிப்பா எனக்கு நினைவுக்கு வரும் .மேலும் இப்போதுள்ள மோட்டார் வசதிஎல்லாம் அப்போது இல்லை ,பல்கலை கழகத்திற்கு தண்ணிர் எடுக்க ஒரு அடிபைப்பை போட்டு ஒரு வயதானவர் தினமும் காலையில் இருந்தது மாலை வரை பைப்பை அடித்துக்கொண்டே இருப்பார் ,அது ஒரு குழாய் வழியாக பல்கலை கழகத்திற்கு போகும் ,அவரிடம் தினமும் வம்பு வளப்பது மாணவர்களின் பொழுது போக்குகளில் ஒன்றாக இருக்கும் ,அவரும் சிரித்துக்கொண்டே எங்களிடம் விளையாடுவார் ஆனால் வேலையில்  கண்ணாக இருப்பார் ,ஒருநாள் அவர் இறந்துவிட மாணவர்கள் அழுத காட்சியும் என் மனதில் நிழலாடுகிறது ,அது போன்ற மனித நேயம் இப்போது குறைந்துள்ளது கவலை அளிப்பதாகவும் உள்ளது . 

No comments:

Post a Comment