Friday, 28 October 2011

செய்யாத தவறுக்கு தண்டனை

 செய்யாத தவறுக்கு தண்டனை 
வீட்டில் அப்போதெல்லாம் வறுமை கொடுமையாக தாண்டவம் ஆடும் .ஒரு பைசாவுக்கு கூட அப்போது மதிப்பு உண்டு ,ஒரு பைசாவுக்கு மணிலா கேக் தருவார்கள் ,ஆனால் ஒரு பைசா தரத்தான் ஆள் இருக்காது .அம்மா வைத்திருக்கும் காசுகளை அவ்வப்போது தெரியாமல் எடுத்துகொண்டு கேக் வாங்கி சாப்பிடுவது வழக்கம் ,அதிகபட்சம் இரண்டு பைசா எடுப்பேன் அவ்வளவுதான் .அதற்க்கு மேல் அப்போது எனக்கு செலவழிக்க கூட தெரியாது ,

இந்த நிலையில் ,அம்மாவுக்கு அவ்வப்போது தெரிந்து அடிவாங்குவதும் சகஜம் ஆகிப்போனது .
ஒருநாள் கடைக்கு சமான் வாங்க சொல்லி காசு கொடுத்தார்கள் ,சமான் வாங்கிகொண்டு மீதம் அவன் 25 பைசா மீதி கொடுத்தான் ,அதை வாங்கி மேல் சட்டைப்பையில் போட்டுகொண்டு வீட்டுக்கு வந்தேன் .சாமானை கொடுத்து விட்டு மீதி காசுவை பையில் பார்த்தால் காசை காணவில்லை ,பை ஓட்டையாக இருந்தததால் விழுந்து விட்டிருக்கிறது ,அம்மாவிடம் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை ,நான் அவ்வளவுக்கும் வாங்கி தின்றுவிட்டேன் என்று உறுதியாக நினைத்து விட்டார்கள் ,அப்பா வேறு விசாரிக்கிறார் ,நான் மீண்டும் மீண்டும் கிழே விழுந்து விட்டது என்று எவ்வளவு சொல்லியும் நம்பவில்லை .அப்பாவும் அம்மாவும் என்னை செம அடி அடிக்கிறார்கள் ,அவர்கள் கஷ்ட்டம் அவர்களுக்கு ,எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை .

அடி கண் மண் தெரியாமல் விழுகிறது ,நான் பலமாக வாந்தி எடுத்து ,மயங்கி விழுந்து விட்டேன் ,அவ்வளவு பலமான அடி .
உடனே அப்பாவும் அம்மாவும் என்னை தூக்கி கொண்டு மருத்துவ மனைக்கு சென்று ,நிறைய செலவு செய்ய வேண்டியதாகி விட்டது ,வரும் வழிஎல்லாம் வேறு திட்டிக்கொண்டே வருகிறார்கள் .
என்னை மருந்து கொடுத்து படுக்க வைத்து விட்டு ,அம்மா வாங்கி வந்த சாமான்களை எடுத்து வைக்கிறார்கள்
நான் சட்டையில் போட்ட காசு ஓட்டை வழியாக கிழே விழாமல் நான் சாமான் வாங்கிய பையில் விழுந்த்திருந்த்தது ,இன்று வரை என் அம்மா அந்த செயலை சொல்லி சொல்லி வருத்தப்படுவார்கள் !!

மிகவும் எனக்கு ஆச்சிரியத்தையும் மறக்க முடியாத நிகழ்வுகளில் அதும் ஒன்றாக என் வாழ்வில் அமைந்து விட்டது

1 comment:

  1. பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthotam.in

    ReplyDelete