Wednesday, 19 October 2011

நீதி தலை கவிழ்ந்து சாகிறது

நீதி தலை கவிழ்ந்து சாகிறது

போலீஸ் விரட்டுகிறது ,காட்சின சாராயத்தை சுடுகாட்டில் போட்டு விட்டு ஓடுகிறது ஒரு கூட்டம்.போலீஸ் விரட்டி விரட்டி பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்தில் உள்ளே ஒருவருடம் தள்ளுகிறது .ஜாமீனில் வெளியே வருகிறான் சாராய மன்னன் மீண்டும் காட்ச்சுகிறான் ,அவனுக்கு துணையாக ஒரு குறிப்பிட்ட ஜாதி சங்க தலைவர் .....டையார் ஆதரவாக இருக்கிறார் .அடியாட்களும் ரவுடிகளும் பக்க பலத்துடன் வலம் வருகிறான் .நல்லவர்கள் ஒதுங்குகிறார்கள் ,ரவடி குடித்து விட்டு ஒரு கடையில் வயிறு முட்ட தின்கிறான் ,காசு கேட்ட கடைக்காரனை அங்கேயே வெட்டி சாய்க்கிறான் , சாதி சங்க தலைவரின் ஆதரவுடன் வேறு ஒருவரை போலீசில் ஆஜர் ஆக்கி விட்டு ,ராஜ்ஜியத்தை தொடர்கின்றான் .
பிரச்சாரம் களை கட்டுகிறது ,கலியனுக்கு வாக்கு அளியுங்கள் ,உங்கள் ஜாதி தலைவரின் ஆதரவு பெற்ற கலியனுக்கு வாக்களியுங்கள் !!
உங்கள் ஊரில் இரவுபள்ளியும் ,குளத்தை தூர் எடுத்ததும் ,குடிநீரும் ,சிமெண்ட் சாலைகள் அமைத்துகொடுத்ததுமான விழிப்புணர்வு இயக்க வேட்பாளர் அருளுக்கு வாக்களியுங்கள் !தனி மனித ஒழுக்க வேட்பாளருக்கு வாக்களியுங்கள் !! நல்லவர்களின் குரல் ஒருபுறம் !!
கலியனுக்கு ஆதரவாக சாராயமும் ,ஓட்டுக்கு பணமும் ,ஜாதி ஆதரவாளர்களும் மறுபுறம் !!
முடிவு அறிவிக்க படுகிறது ,கலியன் 30 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெறுகிறான் ,வார்டுக்கு ஜெயித்த மற்ற உறுப்பினர்களை கடத்தி பணம் கொடுத்து பேரூராட்சி தலைவர் ஆகிறான் .
நீதி தலை கவிழ்ந்து சாகிறது .
ஜாதி தலைவன் ஒரு கொலை வழக்கில் மாட்டி செல்வாக்கு இழக்கிறான் ,ஜெயித்த அவன் ஜாதி கலியன் அதிமுக வில் தஞ்சம் அடைகிறான் .
மீண்டும் தேர்தல் ஜாதி தலைவர் ஒரு வார்டுக்கு ஒட்டு கேட்டு வீடு வீடாக வருகிறார் ,அவரை எதிர்த்து அதே கலியன் ,
ஆனால் இந்த தேர்தலில் காணபோனது விழிப்புணர்வு இயக்கம் !!
அதே சாராயம் ,அதே பணம் ஆனால் மக்கள் மனதில் ஊறி இருக்கும் ஜாதி உணர்வு சற்று வேறுபக்கம் திரும்புவது போல் தெரிகிறது !!
தேர்த்தல் முடிவு வரும்போது தான் தெரியும் !!ஜாதியா !!ரவ்டியா !!என்று
ஆனால் தோற்றது விழிப்புணர்வு இல்லை மக்கள் தான் !!

அது சரி அந்த சாராய வியாபாரி என்ன ஆனான் !!அதானே உங்கள் கேள்வி!!
அதான் கதையில் கலியனாக இருக்கிறானே !!இருவரும் ஒருவர் தான் !!

No comments:

Post a Comment