Thursday, 6 October 2011

ஐந்தாம் வகுப்பு பள்ளி

அதே ஐந்தாம் வகுப்பு பள்ளியில் பரிசோதனை செய்ய மாவட்டகல்வி அதிகாரி வர இருப்பதாக ஒருநாள் அறிவிப்பு செய்தார்கள் ,நாங்கள் எல்லோரும் பயந்தது கொண்டு அமைதியாக உட்கார்ந்தது இருந்தோம் ,எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியராக மாலதி என்ற ஆசிரியை இருந்த்தார்கள்,நல்ல சிவப்பாக பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள் ,தவறாக எடுத்துக்கொள்ளதிர்கள் ,அந்த வயதில் அழகு மட்டும் தான் தெரியும் . மாவட்டகல்வி அதிகாரி அவர்கள் வந்ததார்கள் ,ஏதேதோ கேட்டார்கள் பிறகு போகிவிட்டர்கள் ,ஆனால் பிறகு அடிக்கடி வர ஆரம்பித்தார்கள் ,எங்களுக்கு பயம் ஆனால் எங்களை ஒன்றும் கேட்பதில்லை ,மாலதி ஆசிரியையிடம் மட்டும் பேசிக்கொண்டிருப்பார்கள் ,பிறகு போகிவிடுவார்கள் இது பிறகு தினமும் நடக்க ஆரம்பித்தது ,பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்களுக்குள் ஒரே கசமுசா என புகைய ஆரம்பித்தது ,நாங்கள் பள்ளிகல்வியை முடித்து விட்டு மேல்நிலை கல்விக்கு வந்துவிட்டோம் பிறகு என்ன நடந்ததது என்றே தெரியவில்லை ,இருந்ததாலும் அவர்கள் செயல் அந்த வயதில் என் மனதில் ஏதோ ஒரு ரணத்தை ஏற்படுத்தியது .சமிபத்தில் பல்கலை கழகத்திற்கு வந்த மாவட்டகல்வி அதிகாரி என்னை பார்த்து ஒரு உதவி கேட்டார்கள் ,அப்போது தான் கூறினார் அவரும் மாலதி ஆசிரியையும் திருமணம் செய்துகொண்டதாக !இந்த விஷயம் சரியா தவறா தெரிய வில்லை ஆனால் என் மனதில் நீங்காத நினைவுகளில் இதுவும் ஒன்றாக அமைந்தது விட்டது .

No comments:

Post a Comment