*தன்னிறைவு பெற உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சகூலி கிடைக்க உத்திரவாதம் இருக்கவேண்டும்.
*குறைந்தபட்சகூலிக்குள் உணவு, உடை, இருக்க இடம், குடும்ப கல்வி,ஆரோக்கியவாழ்வுக்கு உத்திரவாதம் இருக்கவேண்டும்.உலகம் உருவாகி பலகோடிஆண்டுகள் ஆகியும் அடிப்படை தேவைக்கும்,அறிவுவளர்ச்சிக்கும் ஆளாய்பறப்பது உலகுக்கே ஏற்ப்பட்ட அவமானமாக கருதவேண்டும்.
*உலக மனிதன் சிந்திக்கவும் ,சிந்தித்தவற்றை விவாதிக்கவும் அறிவு அரங்கங்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தவேண்டும்.
*அறிவுக்கும் ,நடைமுறைக்கும் ஒவ்வாத உலகமக்களுக்கு இழிவுதரும் பழக்கவழக்கங்களை சிந்தனை அரங்கங்களிலே விவாதித்து தடை விதிக்கவேண்டும்.
*சிந்தனை அரங்கத்தில் விவாதிக்கப்படவேண்டிய பொருள்களுக்கு உச்சநிலை எதுவும் நிர்ணயிக்ககூடாது. எந்த பொருள்பற்றியும் உலக மக்கள் விவாதிக்க அரங்கங்கள் ஏற்படுத்தவேண்டும்.
*கல்வி முறையில் இன்றைய நிலையில் உள்ள ஆராய்ச்சிமுடிவுகள் அனைத்தும் பள்ளிகல்வி நிலையிலேயோ அல்லது இளநிலைபட்டத்திற்குள்ளாகவோ எளிமையாக கற்றுதரப்பட்டிருக்கவேண்டும். அனைத்தும் செயல்முறை கல்வியாக அமைக்கப்படவேண்டும்.பள்ளி இறுதி நிலையிலேயே மாணவண் தானே இன்றைய உயர்ந்த தாயாரிப்புகளான கணிணியை தயாரிக்கவும் ,இராக்கட் தொழில் நுட்பம் வரை முழுமையாக கற்று தெரிந்திருக்கவும் வகைசெய்ய வேண்டும். மேற்கொண்டு ஆய்வுக்கல்விகளையே ஊக்குவிக்கவேண்டும்.
*தாய்மொழியில் கல்வியையும்,தெளிவுர உலகதொடர்பு மொழியையும் கற்று தரப்பட்டிருக்கவேண்டும்.
*உலகில் உள்ள எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரவும், தங்கவும், தொழில் செய்யவும் அனுமதிக்கப்படவேண்டும்.
*அரசுகளின் அனைத்து நிலை செயல்பாட்டையும் பற்றி தெரிந்துகொள்ள முழு உரிமையும் அளிக்கப்படவேண்டும்.
*அரசின் பிடிக்காத செயல்பாடுகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்படவேண்டும்.பெரும்பான்மை மக்கள் எதிர் முடிவுகள் எடுத்தால் அரசின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
*மக்களின் அடிப்படை கடமைகள் சட்டமாக்கப்பட வேண்டும்.
*சாதி,மதம்,மொழி,நாடு தொடர்பான எந்தவிதமான சான்றுகளும் அரசு பதிவுகளில் இடம் பெறக்கூடாது.ஒருவனின் வாய்வழியின்றி எந்தவித அரசு ஆதாரங்களும் இருக்க அனுமதிக்க கூடாது.
*சாதி,மதம்,மொழி,நாடுகளுக்கு அப்பாற்பட்டு திருமணபந்தங்களை ஏற்படுத்த வேண்டும்.
*உடை,சின்னம் என்ற எதுவும், இவர் இதை சார்ந்தவர் என்ற அடையாளங்களை முன்னிருத்த அனுமதியளிக்ககூடாது. தற்போது இருக்கின்ற மத கோட்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிவியலுக்கும் நடைமுறை உண்மைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக உள்ளவைகளையும், மூடபழக்கவழக்கங்களையும் முற்றிலும் தடை செய்யவேண்டும்.
இவைகளை செய்தால் மனிதன் மனிதனாக வாழ்வான்.இல்லையேல் இப்போது இருக்கின்ற போட்டி பொறாமை உலகில் மாக்களாக தான் வாழவேண்டும்.