Wednesday, 27 July 2011

பாரதபிரதமருக்கு ஒர் கடிதம்[வேண்டுகோள்]


ஐயா,
வணக்கம்,நான் மனிதநேயத்தோடு  இந்தியாவில் வாழ்கின்ற தமிழன் என்பதில் பெருமைகொள்கின்றேன் .இந்தியா மிக பலமான நாடக உருவாகிவருவது மிக்க மகிழ்ச்சி .அதில் உள்ள சில குறைகளையும் கலைந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .கடந்த ஒருமாதகாலமாக
ஓர்குட் குழுமத்தில் "உலக தமிழ் மக்கள் அரங்கத்தில் " கலைஞ்சரே   ஏன் இந்த தோல்வி ? என்ற தலைப்பில் 250 க்கு மேற்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டன." மாநில சுயாட்சி கோரிக்கையை வலுவான  கட்சிகள் முன்னெடுத்தால் வெற்றி பெறுவதற்கான வாய்புகள் பிரகாசமாக உள்ளது "என்ற கருத்து பலவழிகளில் முன்வைக்கப்பட்டது .ஏன் நமது இந்தியாவில் மாநிலங்களுக்கு அமெரிக்காவில் உள்ளது போல் சுயாட்சி அதிகாரம் அளிக்க கூடாது ?ஏன் இந்தியாவை United States of India வாக மாற்றக்கூடாது?

Tuesday, 26 July 2011

"கோபம் கூட புன்னகை தான்".........

"கோபம் கூட புன்னகை தான்"..........
"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறி கொள்ளப் படுவது,
நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை"
"உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள்' அல்ல.
கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் 'நல்லவர்கள்' தான்".........
நம்பிக்கை என்பது விழித்திருக்கும்
நிலையில் நாம் காணும் கனவு.....
"பிறப்பால்
வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால்
வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில்
யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது
வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்"....
"நீங்கள் என் வார்த்தைகளை படிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் உங்கள் கண்கள் வழியே உங்கள் இதயத்தை தொடுகிறேன்"....
"மறக்கப்படும் அன்பும், மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது".......
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர
வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்...........சுவாமி
விவேகானந்தர்.
"நான் ஒழிக்க வேண்டும் என்று கூறுவது, இருக்கின்ற
ஒன்றை அல்ல . இல்லாததை இருப்பதாய் கருதிக்கொண்டு மானமும் அறிவும் கெட்டு
வாழ்பவர்களின் முட்டாள் தனத்தை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம்" ---- பெரியார்
எவன்
ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக
இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ
அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும்
பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். - புரட்சியாளர்
‍அம்பேத்கர்.....
தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும்,
தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன.
இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி
எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல....
-சார்லஸ் டார்வின்
"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே
அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர்,
மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து
வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.
அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து
இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும்
பொழுது சொர்க்கலாவது இனிய மணம்
உடையதாக வெளிப்படட்டும்" ....புத்தர்
"பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்.......
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்".........

Saturday, 23 July 2011

தோழர்களே !இங்கே ஒருங்கிணைவோம் !!

தனி மனித ஒழுக்கம் உள்ளவர்களா!,சமுக அக்கறை உள்ளவர்களா!,மனிதநேயத்தையும் ,மனித உரிமைகளையும் மதிப்பவர்களா!,அகிம்சை  மீது நம்பிக்கை உள்ளவர்களா !மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உள்ளவர்களா !நியாயமான  காரணங்களுக்காக போராடுபவர்களின் ஆதரவாளர்களா !
ராணுவம் இல்லா உலகை காண ஆசைபடுபவர்களா!

தோழர்களே !இங்கே ஒருங்கிணைவோம் !! 

Wednesday, 20 July 2011

இனத்துரோகிகளே!


துரோகி உன் பெயர் ...
கொத்து கொத்தாய் கொன்றது நினைவில்லையா?
கொடுமையின் கோரத்தை நிகழ்த்திவிட்டு
ஒட்டு கேட்கும் ராஜ்பக்சேயுடன் கைகுலுக்கும்_துரோகி
‍‍‍‍‍‍________________________
கிளிநொச்சி வீர‌த்தின் விளைநிலம்
மண்ணே! உம்மைவிழுங்கிவிடும்
மாவீரர் முச்சே உம்மை மரணத்தின் வாசலுக்கு விரட்டும்
இனி தமிழினம் உம்மை காரி உமிழும்!
கை தட்டு ஒசைகளை கேட்ட நீ வேறு தட்டு ஒசைகளையும் இனி
தமிழக தரணியில் கேட்க வேண்டியிருக்கும்!
மனம் மாறிய தோழமைக்கு வண‌க்க்ம்!
மிர‌ட்டிய கோழைகளே! தமிழகத்து தமிழன் இனத்தூரோகம்
செய்ய துணியமாட்டான்!அப்படி செய்தால் தமிழ்தாயிக்கு பிறந்திருக்கமாட்டான்!
காலத்தின் கோலம் கைகட்டி கோழையாய் நிற்கின்றோம்
இனத்துரோகிகளே!காலம் வரும் களம் காண்போம் கைகோர்த்து
சூழும் இனப்பகை சூரியன் கண்ட பனிப்போல் பறக்கும்! பார்! பார்!பார்!
Tongue Tongue Tongue Tongue Tongue

Sunday, 17 July 2011

தனிமனித உரிமைகள் என்னென்ன?


தனிமனித உரிமைகள் என்னென்ன?
*தன்னிறைவு பெற உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தபட்சகூலி கிடைக்க உத்திரவாதம் இருக்கவேண்டும்.
*குறைந்தபட்சகூலிக்குள் உணவு, உடை, இருக்க இடம், குடும்ப கல்வி,ஆரோக்கியவாழ்வுக்கு உத்திரவாதம் இருக்கவேண்டும்.உலகம் உருவாகி பலகோடிஆண்டுகள் ஆகியும் அடிப்படை தேவைக்கும்,அறிவுவளர்ச்சிக்கும் ஆளாய்பற‌ப்பது உல‌குக்கே ஏற்ப்பட்ட அவமானமாக கருதவேண்டும்.
*உலக மனிதன் சிந்திக்கவும் ,சிந்தித்தவற்றை விவாதிக்கவும் அறிவு அரங்கங்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தவேண்டும்.
*அறிவுக்கும் ,நடைமுறைக்கும் ஒவ்வாத உலகமக்களுக்கு இழிவுதரும் பழக்கவழக்கங்களை சிந்தனை அரங்கங்களிலே விவாதித்து தடை விதிக்கவேண்டும்.
*சிந்தனை அரங்கத்தில் விவாதிக்கப்படவேண்டிய பொருள்களுக்கு உச்சநிலை எதுவும் நிர்ணயிக்ககூடாது. எந்த பொருள்பற்றியும் உலக மக்கள் விவாதிக்க அரங்கங்கள் ஏற்படுத்தவேண்டும்.
*கல்வி முறையில் இன்றைய நிலையில் உள்ள ஆராய்ச்சிமுடிவுகள் அனைத்தும் பள்ளிகல்வி நிலையிலேயோ அல்லது இளநிலைபட்டத்திற்குள்ளாகவோ எளிமையாக கற்றுதரப்பட்டிருக்க‌வேண்டும். அனைத்தும் செயல்முறை கல்வியாக‌ அமைக்கப்படவேண்டும்.பள்ளி இறுதி நிலையிலேயே மாணவண் தானே இன்றைய உயர்ந்த தாயாரிப்புகளான‌ கணிணியை தயாரிக்கவும் ,இராக்கட் தொழில் நுட்பம் வரை முழுமையாக கற்று தெரிந்திருக்கவும் வகைசெய்ய வேண்டும். மேற்கொண்டு ஆய்வுக்கல்விகளையே ஊக்குவிக்கவேண்டும்.
*தாய்மொழியில் கல்வியையும்,தெளிவுர உலகதொடர்பு மொழியையும் கற்று தரப்பட்டிருக்கவேண்டும்.
*உலகில் உள்ள எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரவும், தங்கவும், தொழில் செய்யவும் அனுமதிக்கப்படவேண்டும்.
*அரசுகளின் அனைத்து நிலை செயல்பாட்டையும் பற்றி தெரிந்துகொள்ள முழு உரிமையும் அளிக்கப்படவேண்டும்.
*அரசின் பிடிக்காத செயல்பாடுகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்படவேண்டும்.பெரும்பான்மை மக்கள் எதிர் முடிவுகள் எடுத்தால் அரசின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
*மக்களின் அடிப்படை கடமைகள் சட்டமாக்கப்பட வேண்டும்.
*சாதி,மதம்,மொழி,நாடு தொடர்பான எந்தவிதமான சான்றுகளும் அரசு பதிவுகளில் இடம் பெறக்கூடாது.ஒருவனின் வாய்வழியின்றி எந்தவித அரசு ஆதாரங்களும் இருக்க அனுமதிக்க கூடாது.
*சாதி,மதம்,மொழி,நாடுகளுக்கு அப்பாற்பட்டு திருமணபந்தங்களை ஏற்படுத்த வேண்டும்.
*உடை,சின்னம் என்ற எதுவும், இவர் இதை சார்ந்தவர் என்ற அடையாள‌ங்களை முன்னிருத்த அனுமதியளிக்க‌கூடாது. தற்போது இருக்கின்ற மத கோட்பாடுகள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிவியலுக்கும் நடைமுறை உண்மைகளுக்கும் மனித உரிமைகளுக்கும் எதிராக உள்ளவைகளையும், மூடபழக்கவழக்கங்களையும் முற்றிலும் தடை செய்யவேண்டும்.
இவைகளை செய்தால் மனிதன் மனிதனாக வாழ்வான்.இல்லையேல் இப்போது இருக்கின்ற போட்டி பொறாமை உலகில் மாக்களாக தான் வாழவேண்டும்.
Shock Shock Shock Shock Shock Shock Shock Shock
இணைப்புகள்: 

வெளிச்சம்

இருட்டின் எதிரி
பனியின் தூரோகி
நிழலின் சக்களத்தி
நிலவின் ஆடை அவிழ்ப்பவன்
விண்மீனின் வில்லன்‍‍‍_ஆனால்
அவ்ன் இல்லை என்றால் இவை எல்லாம்..............? Star Star Star Star Star Star :: நன்றியுடன்: http://vizhippuulagam.blogspot.com/

இந்திய ஜனநாயகத்தில் தேவையான உடனடி மாற்றம்?


" bye bye bye ஜனநாயகத்தில் ஊழலும்,விரக்தியும் காணப்படுவதை நீக்கினாலே இந்திய ஜனநாயகம் வலுப்படும்!"
Choices

Wednesday, 13 July 2011

குண்டுவெடிப்பு

ம்பாயில் மீண்டும் குண்டு,
இந்தியாவே! நீயா உலகவல்லரசு
நாட்டையே காக்க இன்னும் நாதியில்லை
உலக வல்லரசு நப்பாசை நமக்கு எதற்க்கு
பாகிஸ்தான் மீது பழியைபோட்டு
மீண்டும் நீ போடு இராஜந‌டை
விரைவில் எதிர்பார்ப்போம் அடுத்த குண்டை............... http://vizhippuulagam.blogspot.com/

Saturday, 9 July 2011

தமிழா!தமிழா!தமிழா!

 தமிழா!தமிழா!தமிழா!
   இந்து மதம்  என்ன சொல்கிறது ?
கிறிஸ்டியன் ,இஸ்லாம் மதங்களில் உருவ வழிபாடுகள்  இல்லாமல் கடவுளை காண்கிறார்கள் ..இந்து மதத்தில் உருவம் இல்லாத கடவுளுக்கு  உருவம் கொடுத்து வணங்குகிறார்கள் .ஆரம்ப காலத்தில் இயற்கையையே தெய்வமாக  தெய்வமாக வழிப்பட்டு வந்தத இனத்தினருக்கு காலப்போக்கில் அந்த இயற்கைக்கு  கற்பனையால்  உருவம் தந்தார்கள். இந்துக்கள் .இந்துமதம்  என்று ஒரு மதம் பழம் இந்தியாவில் இருந்ததே இல்லை .ஆங்கிலேயர்களே இந்து மதத்தினர் என்று பெயரிட்டு அழைத்தார்கள் .அதற்க்கு முன்னால் இந்த இந்து மதத்தில்  சைவ மதம் வைணவ மதம் ஜைன மதம் புத்த மதம் என பல மதங்கள் இருந்தன .ஆங்கிலேயர்கள் தான் அவைகளை ஒருங்கிணைத்து இந்து மதமாக உருவாக்கினார்கள் .சிவன் பார்வதி பிரமன் திருமால் முருகன் பிள்ளையார் இலட்சுமி
 

Friday, 8 July 2011

கலைஞரே! ஏன் இந்த தோல்வி?



கலைஞரே! ஏன் இந்த தோல்வி? என்னுள் எழும்பிய வினாவை உலகுக்கு இயம்புகின்ரேன்.என்ன செய்யவில்லை கலைஞர்,குடிசை மாடியாக கனவு கண்டது தவறா? 108 தந்தது தவறா?விவசாய கடன் தள்ளுபடி தவறா? வட்டியில்லா கடன் தந்தது தவறா? மருத்துவ காப்பீடு தந்தது தவறா? அரசு ஊழியர்களுக்கு அள்ளி தந்தது தவறா? ஒரு ரூபாய் அரிசி தவறா? டிவி தந்தது தவறா?.........................இப்படி நிறைய "தவறா?"க்களை அடுக்கிகொண்டே போகலாம்.இருப்பினும் தோல்வி ஏன்?
*காங்கரஸுடன் கூடியது தவறா?
*உங்கள் குடும்பத்தை முன்னிறுத்தியது தவறா?
*விஜயகாந்த் எழுச்சியா?
*ஸ்பெக்ட்ரம் ஊழலா?
*இலங்கை பிரச்சனையை கையாண்டவிதம் தவறா?
*ஜெயலலிதா சொல்வதுபோல் அவர் முன்னர் செய்த ஆட்சிதான் மக்களுக்கு பிடிக்கிறதா?
*மக்கள் எதையும் சிந்திக்காமல் மாற்றம் வந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களா?
*உங்கள் உள்ளுர் பிரதிநிதிகள் உங்களுக்கு குழிதோண்டி விட்டனரோ?
எப்படி இருந்தாலும் இந்த தோல்வி உங்களுக்கு மட்டும் ஏற்பட்டது அல்ல,தமிழ்நாட்டு மக்கள் மெளனமாக எதையோ சொல்ல வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
இருப்பினும், கீழே இணைத்திருக்கும் காணொலி காட்சி கலைஞராக நீங்கள் இன்றும் இருந்தால் உங்கள் தோல்வி தமிழனுக்கு ஏற்பட்ட தோல்விதான், கலைஞரே!
http://www.youtube.com/watch?v=VeF9mmQmOUo&feature=player_embedded

Thursday, 7 July 2011

கலைஞருக்கு மாற்று வேண்டும்!



இந்தியாவில் என்ன நடக்கிறது?
என் இந்தியநாடே! என்ன ஆயிற்று உனக்கு?
ஊழலை பற்றிய பேச்சு ஊரெல்லாம் நாறுகிறது!
தினம் ஒரு மத்திய மந்திரி பதவிவிலகுகிறார்!
ஊழலுக்கு எதிராய் புத்தர் வேடம் பூண்டு சாமியார்கள்!
தமிழகத்து ம்ந்திரிகள் மட்டும் தான் கொள்ளையர்களா?
மற்றோர் எல்லாம் புனிதர்களா?
எத்தனை ஊழல் நடந்தது எந்த அரசியல்வாதி சிறையில் வாடுகிறான்!
இராஜிவ்காந்தி மீதான ஊழலில் எத்தனை நாள் சிறையில் இருந்தார்?
உயிரோடு அமெரிக்காவில் உலவும் குவத்ரோச்சியை இந்தியா கொண்டு வரமுடியவில்லை என்று இராஜிவ்காந்தி மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவில்லையா?
இந்திரா மீதான ஊழல் வழக்கு என்ன ஆயிற்று?
இன்னும் எத்தனையோ வழக்குகள் தள்ளுபடி ஆகவில்லையா?
திமுக மந்திரிகள் மட்டும் சிறையில் ஏதோ நெருடுகிறது! நான் திமுகவுக்கு வக்காலத்து வாங்கவில்லை!
அரசியல் சதி பின்னப்படுகிறதோ?
தமிழக அரசியலில் தமிழுணர்வாள்ர்கள் ஒரங்கட்டபடுகிறார்களோ!
திமுகவை ஒழித்துவிட்டு மீண்டும் தேசிய அரசியல் தலைதூக்க சதிவலை பின்னப்படுகிறதோ!
தெரிந்தோ தெரியாமலோ, தன் குடும்பத்தை முன்னிருத்தி தனக்குபின் திமுகவை அழிக்க நினைக்கிறாரா?_கலைஞர்!
திமுக அதன் உண்மையான முகத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது தமிழினத்துக்கு ஆபத்தைதான் தரும்.கலைஞர் அதை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் தகர்ந்து வருகிறது.கலைஞரை ஒழித்துவிட்டாலோ! அல்லது குடும்ப அரசியலில் சிக்கி அவரே அழிந்தாலோ! இந்திய தேசியவாதிகளுக்கு வைகோ,சீமான்,நெடுமாறன்,இராமதாஸ்,திருமாவளவன் இவர்கள் எல்லாம் தூசுக்கு சமம்,இவர்களை ஜெயலலிதாவே எளிதாக ஒழித்துவிடுவார்.எனக்கு என்னமோ அரசியல் சூழ்ச்சி தமிழகத்தில் அரங்கேருவது போல் தோன்றுகிறது!
தமிழர்களே!ஜாக்கிரதை!
கலைஞருக்கு மாற்று வேண்டும்!ஆனால் அது ஜெயலலிதா இல்லை!இல்லை!!இல்லை!!!இல்லை!!!!இல்லை!!!!!...................... http://vizhippuulagam.blogspot.com/
Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm :

Tuesday, 5 July 2011

வேலியே நீ பயிரை மேயலாமா?


வேலியே நீ பயிரை மேயலாமா?
நடுத்தெருவில் நாயினும் கீழாய் காவல்துறை.கண்ணுற்றபோது கலங்காமல் இருக்கமுடியவில்லை.காக்க வேண்டிய காவல்துறையே குடிபோதையில் கலாட்டா செய்தால் மரியாதை அவர்கள் மீது எப்படி வரும்.காதலனை ஏமாற்றி கல்லூரி மாணவியை கடத்திய திருச்சி இன்ஸ்பெக்டர் கைது இது இன்றைய செய்தி,இதுபோல்.......*லாக்கப்பில் அடித்து மரணம்,*காவல் நிலயத்திலேயே கற்பழிப்பு *காவல் நிலயத்திலேயே கட்டபஞ்சாயத்து *
இப்படி தினம் ஒரு செய்தி வருகிறதே இதை தடுப்பது எப்படி என்று ஆட்சியாளர்கள் ஒருகணமாவது சிந்தித்ததுண்டா? இதோடு இணைத்துள்ள கானொலியை பாருங்கள் ஒரு பெண் போலிஸ் ஒரு பத்திரிக்கைகாரர் காலில் விழுவதை .இப்படி மதிக்க வேண்டிய காவல்துறை கண்டவர் கால்களில் மிதிபடுகிறதே,நல்லவர்களாக இருப்பவர்கள் உள்ளம் அதை கண்டு வேதனைபடுகிறதே! ஆட்சியாளர்களளே! இதை மாற்ற நடவடிக்கை எடுங்கள் . காவல் துறையின் புகழை காப்பாற்றுங்கள். தனிமனித ஒழுக்கம் உள்ளவர்களை மட்டும் காவல் துறையில் பணியாற்ற அனுமதியுங்கள் .புகை பழக்கம் இருந்தால் கூட நியமிக்காதீர்கள். நியமித்த பிறகு செய்தால் என்ன செய்வது ? என நீங்கள் கேட்பது புரிகிறது, தயவு தாட்சணயம் காட்டாதீர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யுங்கள் அப்போதுதான் காவல் துறை மீதான மதிப்பு உயரும்http://vizhippuulagam.blogspot.com/ Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm

Monday, 4 July 2011

பயணங்கள் முடிவதில்லை

காற்று பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
சூரிய ஒளி, பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
உலகமே பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
மனித வாழ்வு  பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
ஏன் என்ற கேள்வி என்னுள்  பயணிக்கிறது ,எல்லை உண்டு -ஆனால்
பயணங்கள் முடிவதில்லை ,
அன்புடன்:http \\ www  . விழிப்பு உலகம் .com

எங்களைபற்றி

சகோதர ,சகோதரிகளே !
                      ஒரே  உலக அரசின்  கீழ் ,இராணுவமே  இல்லாத  உலகத்தில் ,தனித்த சுயாட்சி  உள்ள தமிழ் நாட்டில்  வாழும் தமிழரை  காண்போம்