சாதிஎன்றால் என்ன ?அது தேவையா ??
இந்தியாவில் சாதி என்ற ஒரு கொடுமையான பிரிவு ,நினைக்கும் போதே நெஞ்சம் கொதிக்கும் .நல்ல நோக்கத்திற்காக செய்யும் தொழிலுக்கு ஏற்ப பிரித்த பிரிவுகள் பல்கி பெருகி பல ஆயிரம் சாதிகளாக உருமாறி இருக்கும் அவலம் தான் என்ன ? அக்காலத்தில் அறிவால் சிறந்த்தவர்களை பாணர்கள் [அந்தணர்கள் ],வியாபாரத்தில் சிறந்த்தவர்களை வைசியர்கள் [வணிகர்கள்]வீரத்தில் சிறந்த படை வீரர்களை சத்திரியர்கள் ,உடலால் உழைப்பவர்களை சூத்திரர்கள் என பிரித்து வைத்திருந்தார்கள் .அவைகள் கூட நல்ல தமிழ் பெயர்களாக பாணர்கள் ,படையாளுனர்கள் ,பெரும் வணிகத்தார் ,தோளர்கள் எனவே அழைக்கப்பட்டது ,இவர்களில் பலர் பல காலங்களில் தொடர்ந்தது ஒரே வேலையை பரம்பரை பரம்பரையாக செய்து வந்ததார்கள் ,அரசர்கள் அருகில் இருந்தவர்கள் செல்வந்தர்களாகவும் ,மற்றவர்கள் பொருளாதரத்தில் பின்தங்கியும் ,அறிவிலேயும் பின்தங்கி விட்டார்கள் .காலத்தின் கோலத்தால் சில உயர் பிரிவினர்களால் மிகவும் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் அடிமை படுத்தப்பட்டு எழ முடியாத வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டது ,"சிந்தியுங்கள்" சில சாதிகளை பாருங்கள் பள்ளம் தோண்டி மண் வேலை செய்பவர்கள் பள்ளர்கள் ,பறையை அடித்தவர்கள் பறையர்கள் ,படையை ஆண்டவர்கள் படையாட்சிகள்
சாதி உருவான வரலாறு புரியும் !!
இப்படி அனைத்து சாதிகளும் தொழிலை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது ."சிந்தியுங்கள் "இப்போது தொழில்கள் எல்லாம் மாறிவிட்ட பிறகு எல்லோரும் எல்லா தொழிலும் செய்யும் பொது இந்த சாதி தேவையா ? இவைகளுக்கு அரசு அங்கிகாரம் தேவையா ?முதல்வன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் சாதியை ஒழிக்க ஒருவழி சொல்வார்கள் .பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு கல்வி, பொருளாதாரத்திலேயும் அவர்கள் உயரும் வரை இட ஒதுக்கிடு தேவைதான் !இட ஒதுக்கீடு , சலுகைகள் அளிப்பதன் அடிப்படையில் மெல்ல மெல்ல அந்த சமுதாயங்கள் மற்றவர்களோடு தற்போது அறிவிலும் ,பொருளாதார ரீதியாகவும் போட்டியீட தொடங்கி இருக்கிறது ,
ஆனால் அவைகளுக்கு சாதி அடையாளங்கள் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் "அ" பிரிவு என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் "ஆ" பிரிவு என்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் "இ "பிரிவு என்றும் மற்றவர்களை" ஈ "பிரிவு என்றும் நான்கு பிரிவுகளை மட்டும் உருவாக்கி அரசு ஆவணங்களில் எந்த சாதி பிரிவுகளுக்கும் அடையலாம் இல்லாமல் முதலிலே செயல் படுத்த வேண்டும் .இதனால் உபசாதிகள் முதலில் ஒழியும் ,
மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவன் ,தான் முனேறிய வகுப்பை சார்ந்தவன் என்று கூறினால் அவன் தாழ்த்தப்பட்டவன் தான் என நிருபிக்கின்ற எந்தவித அரசு ஆவணங்களும் ஆதாரமாக இருக்க கூடாது .கலப்பு திருமணங்கள் அவர்கள் என்ன சாதி என அறியப்படாமலே நடப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்." அ "பிரிவை சார்ந்தவர்கள் கல்வி ,மற்றும் பொருளாதாரத்திலேயும் குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டால் "ஆ" பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் ,இதே போல் படிப்படியாக எல்லோரும்" ஈ "பிரிவுக்கு உயர்த்தப்பட்டு அனைத்து பிரிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும் ,
முதலில் ஊர் ஒதுக்கு புறத்தில் இருக்கும் சேரியை ஒழித்து ஊரோடு இணைக்க வேண்டும் ,அப்போது தான் சாதிகள் படிப்படியாக ஒழியும் !!
இதில் சாதி உருவான விதம் பற்றியும் ,அதை ஒழிப்பதற்கான வழிகளை பற்றியும் என் அறிவுக்கு எட்டியதை பதிவு செய்திருக்கின்றேன் ,உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்
இந்தியாவில் சாதி என்ற ஒரு கொடுமையான பிரிவு ,நினைக்கும் போதே நெஞ்சம் கொதிக்கும் .நல்ல நோக்கத்திற்காக செய்யும் தொழிலுக்கு ஏற்ப பிரித்த பிரிவுகள் பல்கி பெருகி பல ஆயிரம் சாதிகளாக உருமாறி இருக்கும் அவலம் தான் என்ன ? அக்காலத்தில் அறிவால் சிறந்த்தவர்களை பாணர்கள் [அந்தணர்கள் ],வியாபாரத்தில் சிறந்த்தவர்களை வைசியர்கள் [வணிகர்கள்]வீரத்தில் சிறந்த படை வீரர்களை சத்திரியர்கள் ,உடலால் உழைப்பவர்களை சூத்திரர்கள் என பிரித்து வைத்திருந்தார்கள் .அவைகள் கூட நல்ல தமிழ் பெயர்களாக பாணர்கள் ,படையாளுனர்கள் ,பெரும் வணிகத்தார் ,தோளர்கள் எனவே அழைக்கப்பட்டது ,இவர்களில் பலர் பல காலங்களில் தொடர்ந்தது ஒரே வேலையை பரம்பரை பரம்பரையாக செய்து வந்ததார்கள் ,அரசர்கள் அருகில் இருந்தவர்கள் செல்வந்தர்களாகவும் ,மற்றவர்கள் பொருளாதரத்தில் பின்தங்கியும் ,அறிவிலேயும் பின்தங்கி விட்டார்கள் .காலத்தின் கோலத்தால் சில உயர் பிரிவினர்களால் மிகவும் தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகள் அடிமை படுத்தப்பட்டு எழ முடியாத வறுமைக்கு தள்ளப்பட்டு விட்டது ,"சிந்தியுங்கள்" சில சாதிகளை பாருங்கள் பள்ளம் தோண்டி மண் வேலை செய்பவர்கள் பள்ளர்கள் ,பறையை அடித்தவர்கள் பறையர்கள் ,படையை ஆண்டவர்கள் படையாட்சிகள்
சாதி உருவான வரலாறு புரியும் !!
இப்படி அனைத்து சாதிகளும் தொழிலை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது ."சிந்தியுங்கள் "இப்போது தொழில்கள் எல்லாம் மாறிவிட்ட பிறகு எல்லோரும் எல்லா தொழிலும் செய்யும் பொது இந்த சாதி தேவையா ? இவைகளுக்கு அரசு அங்கிகாரம் தேவையா ?முதல்வன் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும் சாதியை ஒழிக்க ஒருவழி சொல்வார்கள் .பல்லாயிரம் ஆண்டுகள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு கல்வி, பொருளாதாரத்திலேயும் அவர்கள் உயரும் வரை இட ஒதுக்கிடு தேவைதான் !இட ஒதுக்கீடு , சலுகைகள் அளிப்பதன் அடிப்படையில் மெல்ல மெல்ல அந்த சமுதாயங்கள் மற்றவர்களோடு தற்போது அறிவிலும் ,பொருளாதார ரீதியாகவும் போட்டியீட தொடங்கி இருக்கிறது ,
ஆனால் அவைகளுக்கு சாதி அடையாளங்கள் இல்லாமல் தாழ்த்தப்பட்டவர்கள் "அ" பிரிவு என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் "ஆ" பிரிவு என்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் "இ "பிரிவு என்றும் மற்றவர்களை" ஈ "பிரிவு என்றும் நான்கு பிரிவுகளை மட்டும் உருவாக்கி அரசு ஆவணங்களில் எந்த சாதி பிரிவுகளுக்கும் அடையலாம் இல்லாமல் முதலிலே செயல் படுத்த வேண்டும் .இதனால் உபசாதிகள் முதலில் ஒழியும் ,
மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவன் ,தான் முனேறிய வகுப்பை சார்ந்தவன் என்று கூறினால் அவன் தாழ்த்தப்பட்டவன் தான் என நிருபிக்கின்ற எந்தவித அரசு ஆவணங்களும் ஆதாரமாக இருக்க கூடாது .கலப்பு திருமணங்கள் அவர்கள் என்ன சாதி என அறியப்படாமலே நடப்பதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும்." அ "பிரிவை சார்ந்தவர்கள் கல்வி ,மற்றும் பொருளாதாரத்திலேயும் குறிப்பிட்ட அளவு முன்னேறி விட்டால் "ஆ" பிரிவுக்கு மாற்றப்பட வேண்டும் ,இதே போல் படிப்படியாக எல்லோரும்" ஈ "பிரிவுக்கு உயர்த்தப்பட்டு அனைத்து பிரிவுகளும் ஒழிக்கப்பட வேண்டும் ,
முதலில் ஊர் ஒதுக்கு புறத்தில் இருக்கும் சேரியை ஒழித்து ஊரோடு இணைக்க வேண்டும் ,அப்போது தான் சாதிகள் படிப்படியாக ஒழியும் !!
இதில் சாதி உருவான விதம் பற்றியும் ,அதை ஒழிப்பதற்கான வழிகளை பற்றியும் என் அறிவுக்கு எட்டியதை பதிவு செய்திருக்கின்றேன் ,உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்
No comments:
Post a Comment