Sunday, 2 October 2011

பள்ளிக்கூடம்

நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் இல்லை தோழர் !அவர் எங்கள் தெருவை சேர்ந்த்தவர் தான் இப்போது கல்யாணம் ஆகி அவரின் மகளுக்கும் கல்யாணம் ஆகபோகிறது !!
இதை விட இன்னுமொருமுறை ,நான் 5 ம் வகுப்பு படித்து கொண்டிருக்கின்றேன் ,முருகேசன் என்று ஒரு ஆசிரியர் மிகவும் அருமையாக வரலாறு பாடம் நடத்துவார் மற்ற பாடங்களும் நடத்துவார் ,ஆனால் படிக்க வில்லை என்றால் மிக கடுமையாக கண்டிப்பார் அவர் தண்டனை மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் ,சாக்பிசை இரண்டு விரல்களுக்கு இடையில் கொடுத்து விரல்களை அமுக்கி  உருட்டுவார் வலி உயிரே போகிவிடும் ,இருந்ததாலும் அவர் மீது எங்களுக்கு அளவு கடந்த பாசம் ,அம்மா அடித்தால் அம்மா மீது வருமே ஒரு கோபம் அப்படி தான் அவர் மீது வரும் ,அப்படிப்பட்டவர் அவர் .திடிரென ஒருநாள் நான் வேளையில் இருந்து நாளை முதல் ஒய்வு பெறபோகிறேன் என அவர் பேச ஆரம்பிக்கும் போது அவர் அழ ஆரம்பித்து விட்டார் பள்ளியில் உள்ள நாங்கள் எல்லோரும் சத்தம் போட்டு பலமாக அழ ஆரம்பித்துவிட்டோம் ,அன்று நாள் முழுவதும் ஒரே அழுகைதான் ,அதோடு மட்டுமில்லாமல் வீட்டில் வந்தும் ஒரே அழுகை ,அதை நினைத்தால் இன்றும் எனக்கு ஆச்சிரியமாக இருக்கும் இப்படிஎல்லாம் இருந்த பள்ளிக்கூடம் இப்போது எப்படி ஆகிவிட்டது .
 

No comments:

Post a Comment