Tuesday, 26 July 2011

"கோபம் கூட புன்னகை தான்".........

"கோபம் கூட புன்னகை தான்"..........
"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறி கொள்ளப் படுவது,
நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை"
"உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள்' அல்ல.
கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் 'நல்லவர்கள்' தான்".........
நம்பிக்கை என்பது விழித்திருக்கும்
நிலையில் நாம் காணும் கனவு.....
"பிறப்பால்
வருவது யாதெனக் கேட்டேன்; பிறந்து பாரென இறைவன் பணித்தான்; இறப்பால்
வருவது யாதென கேட்டேன்;இறந்து பாரென இறைவன் பணித்தான்' மனையாள் சுகமெனில்
யாதெனக்கேட்டேன்;மணந்து பாரென இறைவன் பணித்தான்;அனுபவித்தேதான் அறிவது
வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்; ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்"....
"நீங்கள் என் வார்த்தைகளை படிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் உங்கள் கண்கள் வழியே உங்கள் இதயத்தை தொடுகிறேன்"....
"மறக்கப்படும் அன்பும், மறுக்கப்படும் அன்பும் மரணத்தை விட கொடுமையானது".......
கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர
வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்...........சுவாமி
விவேகானந்தர்.
"நான் ஒழிக்க வேண்டும் என்று கூறுவது, இருக்கின்ற
ஒன்றை அல்ல . இல்லாததை இருப்பதாய் கருதிக்கொண்டு மானமும் அறிவும் கெட்டு
வாழ்பவர்களின் முட்டாள் தனத்தை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம்" ---- பெரியார்
எவன்
ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக
இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோ
அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும்
பெற்றிருக்கின்றானோ - அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன். - புரட்சியாளர்
‍அம்பேத்கர்.....
தாவரங்கள் உட்பட உலகின் எல்லா உயிரினங்களும்,
தொடர்ந்து பல்வகையான மாற்றங்களுக்கு உட்பட்டே தற்போதைய வடிவங்களைப் பெற்றன.
இப்பரிணாம வளர்ச்சிக்கு மெதுவான, படிப்படியான இயற்கை மாற்றங்களேயன்றி
எவ்விதத் தெய்வத்தன்மையும் காரணமல்ல....
-சார்லஸ் டார்வின்
"மனிதனிடமிருந்து வெளிப்படும் எல்லாமே
அருவருப்பானவை. வியர்வை, எச்சில், சிறுநீர்,
மலம், சுக்கிலம், சளி , இப்படி நம்மிடமிருந்து
வெளிப்படும் யாவுமே துர்நாற்றம் உடையவை.
அருவருப்பு தருபவை. உன்னிடமிருந்து
இத்தனை துர்நாற்றம் மிக்கவை வெளிப்படும்
பொழுது சொர்க்கலாவது இனிய மணம்
உடையதாக வெளிப்படட்டும்" ....புத்தர்
"பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்.......
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்".........

No comments:

Post a Comment