என் இந்தியநாடே! என்ன ஆயிற்று உனக்கு?
ஊழலை பற்றிய பேச்சு ஊரெல்லாம் நாறுகிறது!
தினம் ஒரு மத்திய மந்திரி பதவிவிலகுகிறார்!
ஊழலுக்கு எதிராய் புத்தர் வேடம் பூண்டு சாமியார்கள்!
தமிழகத்து ம்ந்திரிகள் மட்டும் தான் கொள்ளையர்களா?
மற்றோர் எல்லாம் புனிதர்களா?
எத்தனை ஊழல் நடந்தது எந்த அரசியல்வாதி சிறையில் வாடுகிறான்!
இராஜிவ்காந்தி மீதான ஊழலில் எத்தனை நாள் சிறையில் இருந்தார்?
உயிரோடு அமெரிக்காவில் உலவும் குவத்ரோச்சியை இந்தியா கொண்டு வரமுடியவில்லை என்று இராஜிவ்காந்தி மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவில்லையா?
இந்திரா மீதான ஊழல் வழக்கு என்ன ஆயிற்று?
இன்னும் எத்தனையோ வழக்குகள் தள்ளுபடி ஆகவில்லையா?
திமுக மந்திரிகள் மட்டும் சிறையில் ஏதோ நெருடுகிறது! நான் திமுகவுக்கு வக்காலத்து வாங்கவில்லை!
அரசியல் சதி பின்னப்படுகிறதோ?
தமிழக அரசியலில் தமிழுணர்வாள்ர்கள் ஒரங்கட்டபடுகிறார்களோ!
திமுகவை ஒழித்துவிட்டு மீண்டும் தேசிய அரசியல் தலைதூக்க சதிவலை பின்னப்படுகிறதோ!
தெரிந்தோ தெரியாமலோ, தன் குடும்பத்தை முன்னிருத்தி தனக்குபின் திமுகவை அழிக்க நினைக்கிறாரா?_கலைஞர்!
திமுக அதன் உண்மையான முகத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்வது தமிழினத்துக்கு ஆபத்தைதான் தரும்.கலைஞர் அதை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையும் தகர்ந்து வருகிறது.கலைஞரை ஒழித்துவிட்டாலோ! அல்லது குடும்ப அரசியலில் சிக்கி அவரே அழிந்தாலோ! இந்திய தேசியவாதிகளுக்கு வைகோ,சீமான்,நெடுமாறன்,இராமதாஸ்,திருமாவளவன் இவர்கள் எல்லாம் தூசுக்கு சமம்,இவர்களை ஜெயலலிதாவே எளிதாக ஒழித்துவிடுவார்.எனக்கு என்னமோ அரசியல் சூழ்ச்சி தமிழகத்தில் அரங்கேருவது போல் தோன்றுகிறது!
தமிழர்களே!ஜாக்கிரதை!
கலைஞருக்கு மாற்று வேண்டும்!ஆனால் அது ஜெயலலிதா இல்லை!இல்லை!!இல்லை!!!இல்லை!!!!இல்லை!!!!!...................... http://vizhippuulagam.blogspot.com/
:
No comments:
Post a Comment