Friday, 8 July 2011

கலைஞரே! ஏன் இந்த தோல்வி?



கலைஞரே! ஏன் இந்த தோல்வி? என்னுள் எழும்பிய வினாவை உலகுக்கு இயம்புகின்ரேன்.என்ன செய்யவில்லை கலைஞர்,குடிசை மாடியாக கனவு கண்டது தவறா? 108 தந்தது தவறா?விவசாய கடன் தள்ளுபடி தவறா? வட்டியில்லா கடன் தந்தது தவறா? மருத்துவ காப்பீடு தந்தது தவறா? அரசு ஊழியர்களுக்கு அள்ளி தந்தது தவறா? ஒரு ரூபாய் அரிசி தவறா? டிவி தந்தது தவறா?.........................இப்படி நிறைய "தவறா?"க்களை அடுக்கிகொண்டே போகலாம்.இருப்பினும் தோல்வி ஏன்?
*காங்கரஸுடன் கூடியது தவறா?
*உங்கள் குடும்பத்தை முன்னிறுத்தியது தவறா?
*விஜயகாந்த் எழுச்சியா?
*ஸ்பெக்ட்ரம் ஊழலா?
*இலங்கை பிரச்சனையை கையாண்டவிதம் தவறா?
*ஜெயலலிதா சொல்வதுபோல் அவர் முன்னர் செய்த ஆட்சிதான் மக்களுக்கு பிடிக்கிறதா?
*மக்கள் எதையும் சிந்திக்காமல் மாற்றம் வந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்களா?
*உங்கள் உள்ளுர் பிரதிநிதிகள் உங்களுக்கு குழிதோண்டி விட்டனரோ?
எப்படி இருந்தாலும் இந்த தோல்வி உங்களுக்கு மட்டும் ஏற்பட்டது அல்ல,தமிழ்நாட்டு மக்கள் மெளனமாக எதையோ சொல்ல வருகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
இருப்பினும், கீழே இணைத்திருக்கும் காணொலி காட்சி கலைஞராக நீங்கள் இன்றும் இருந்தால் உங்கள் தோல்வி தமிழனுக்கு ஏற்பட்ட தோல்விதான், கலைஞரே!
http://www.youtube.com/watch?v=VeF9mmQmOUo&feature=player_embedded

No comments:

Post a Comment