அனைத்து ஆன்மிக கருத்துக்களும் ,மதங்களும் மனிதனின் மரண பயத்தை தன் பலமாக எடுத்துக்கொண்டு பல்வேறு மூட நம்பிக்கைகளை பரப்புகின்றன .எல்லா மதங்களும் கிட்ட தட்ட சுவர்க்கம் ,நரகம் ,மறுபிறவி என்று உண்மையில்லாத விவரங்களை கூறிமக்களை நெறிபடுத்த முயல்கின்றன அல்லது மதத்தின் மூட நம்பிக்கைகளை நம்பவைக்க பயன்படுத்துகின்றன .
இல்லாத ஒன்றை அல்லது உணரவே முடியாத ஒன்றை இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவது மிக பெரிய மோசடி குற்றமாகும் . மதங்கள் வலியுறுத்துகின்ற ஜீவாத்மா ,பரமாத்மா என்ற கருத்துக்களும் விவாதத்திற்கு உரியவை . ஒன்றும் இல்லாததிலிருந்த்துதான் அனைத்தும் உருவாயிற்று இந்த ஒன்றும் இல்லாததுதான் பரமாத்மா என்றும் மதங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இவைகள் அறிவியல் பூர்வ கருத்துக்களோடும் இயல்பு நிலையிலும் ஏற்றுக்கொள்ள கூடிய பொருள்கள் .ஆனால் மனிதனின் மரணத்திற்கு பின் ஆன்மா என்ற ஓன்று வெளியேறி ,தான் பெற்ற பாவ, புண்ணிய காரணங்களுக்கு ஏற்ப பரமாத்மா ,சொர்க்கம் ,நரகம் ஆவி ,மறுபிறவி அடைகின்றன என்பது ஏற்க முடியாத கருத்துக்கள் .
அதாவது மதங்களின் கோட்பாட்டுப்படி இருக்கின்ற ஆன்மாக்கள் தான் மீண்டும் பிறக்கின்றன என்று ஏற்றுக்கொண்டால் முப்பது கோடி மக்கள் தொகையாக இருந்த இந்தியாவில் 125 கோடியாக மக்கள் தொகை பல்கி பெறுக எது காரணம் ?ஆன்மாக்கள் இரண்டாக பிரியும் தன்மை வாய்ந்ததா ?இன்னும் சொல்லபோனால் ஒரு மனிதனிடம் இருந்து ஒரு முறை வெளியேறும் ஆரோக்கியமான விந்திலிருந்த்து பல லட்சம் குழந்தைகளை உருவாக்க முடியும் ..அறிவியல் தகுந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் இந்த பல லட்சம் குழந்தைகளையும் உருவாக்க முடியும் .இதை உலகம் முழுவதும் நடைமுறை படுத்தினால் நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது .பல கோடி கோடி மக்களை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ள முடியும் இன்னும் உயிரியல் படிப்பின்படி செல்கள் இருந்தாலே குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியும் .
அதே போல் இன்றைய உலகில் மனிதன் நினைத்தால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் .வேண்டாம் என்றால் தவிர்க்க முடியும் .அப்போது பிறப்பு என்பதற்கும் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்புள்ளது என்று கூறுகிற ஆன்மீக கருத்துக்கள் தவறானவை ஆகும் .இன்னும் சில மதவாதிகள் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் ஏன் நல்ல குழந்தைகளாக பிறப்பதில்லை .கூன்,குருடாக பிறக்கின்றன ,இதற்க்கெல்லாம் இறைவன் தான் காரணம் என்கிறார்கள் .
கர்பமான தாய் கர்ப்பமான முதல் முன்று மாதங்கள் தலைவலி மாத்திரை உண்டாலும் ,கர்ப்பத்தடை மாத்திரை உண்டாலும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி குறையுடன் தான் பிறப்பார்கள் .இதில் கடவுளாக தாய்யல்லவா காட்சி தருகிறாள் .எனவே இதிலும் கடவுள் எங்கே வந்தார் .எனவே இயல்பாக எதிபாராமல் நடக்கின்ற நிகழ்சிகளுக்கு எல்லாம் கடவுள் காரணம் என்று கூறுவது அறிவுக்கு ஏற்றதன்று .
ஆனாலும் மரணத்தை பற்றிய தெளிவு நம்மில் பலருக்கு இருப்பதில்லை ,மரணத்தை துணிவோடு ஏற்றுகொள்கின்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் ,இறைவன் பற்றிய அறிவுக்கு ஏற்பில்லாத கருத்துக்களை கூறும்போது கேள்வி கேட்க மனம் துணியும் ,தெளியும் .ஆனால் நாம் மரண பயத்தை மனதிலே சுமந்து கொண்டு சாகாத பிணமாக வலம் வருவதால் அறிவுப்பூர்வமான கருத்துக்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை .2000 ஆண்டுகளுக்கு முன்பே நமது பாட்டன் திருவள்ளுவன் எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்தித்திருக்கின்றான் பாருங்கள் , "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு !"
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு "
நாம் தூங்கும் போது நாம் உயிரோடு இருக்கின்றோம் நம் நினைவுகள் ,ஆன்மா என கூறப்படுவன அனைத்தும் இருப்பதில்லை .நமது மூளை முற்றிலும் செயல் இழந்துவிடுகிறது ஆனால் தற்காலிகமானது .அதாவது மூளை தற்காலிகமாக செயல் இழந்துவிட்டால் அல்லது செயலை நிறுத்தி விட்டால் நாம் எந்த நினைவுகளும் இல்லாத மரண நிலையை அடைந்து விடுகின்றோம் .ஆனால் மரணம் என்று ஓன்று நிகழ்ந்து விட்டால் மூளை முற்றிலும் நிரந்தரமாக செயல் இழந்து விடுகிறது . எனவே "மூளை முற்றிலும் செயல் இழந்துவிட்டால் மரணம் ,தற்காலிகமாக செயல் இழந்தால் தூக்கம் " ,இதில் இறைவனுக்கோ ஆன்மாவிர்க்கோ, பரமாத்மாவிர்க்கோ தொடர்பு இல்லை என்பதை உணர்ந்து தெளிவு பெறுவோமாக !! .
எனவே மரண பயத்தை தவிர்த்து வாழும் போது வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக நாமே ஆகுவோம் அதை தான் வள்ளுவன்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் _வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ."
என்று கூறுகிறார் .
இல்லாத ஒன்றை அல்லது உணரவே முடியாத ஒன்றை இருப்பதாக கூறி மக்களை ஏமாற்றுவது மிக பெரிய மோசடி குற்றமாகும் . மதங்கள் வலியுறுத்துகின்ற ஜீவாத்மா ,பரமாத்மா என்ற கருத்துக்களும் விவாதத்திற்கு உரியவை . ஒன்றும் இல்லாததிலிருந்த்துதான் அனைத்தும் உருவாயிற்று இந்த ஒன்றும் இல்லாததுதான் பரமாத்மா என்றும் மதங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன. இவைகள் அறிவியல் பூர்வ கருத்துக்களோடும் இயல்பு நிலையிலும் ஏற்றுக்கொள்ள கூடிய பொருள்கள் .ஆனால் மனிதனின் மரணத்திற்கு பின் ஆன்மா என்ற ஓன்று வெளியேறி ,தான் பெற்ற பாவ, புண்ணிய காரணங்களுக்கு ஏற்ப பரமாத்மா ,சொர்க்கம் ,நரகம் ஆவி ,மறுபிறவி அடைகின்றன என்பது ஏற்க முடியாத கருத்துக்கள் .
அதாவது மதங்களின் கோட்பாட்டுப்படி இருக்கின்ற ஆன்மாக்கள் தான் மீண்டும் பிறக்கின்றன என்று ஏற்றுக்கொண்டால் முப்பது கோடி மக்கள் தொகையாக இருந்த இந்தியாவில் 125 கோடியாக மக்கள் தொகை பல்கி பெறுக எது காரணம் ?ஆன்மாக்கள் இரண்டாக பிரியும் தன்மை வாய்ந்ததா ?இன்னும் சொல்லபோனால் ஒரு மனிதனிடம் இருந்து ஒரு முறை வெளியேறும் ஆரோக்கியமான விந்திலிருந்த்து பல லட்சம் குழந்தைகளை உருவாக்க முடியும் ..அறிவியல் தகுந்த வாய்ப்புகளை பயன்படுத்தினால் இந்த பல லட்சம் குழந்தைகளையும் உருவாக்க முடியும் .இதை உலகம் முழுவதும் நடைமுறை படுத்தினால் நினைத்துப்பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது .பல கோடி கோடி மக்களை எப்போது வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ள முடியும் இன்னும் உயிரியல் படிப்பின்படி செல்கள் இருந்தாலே குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியும் .
அதே போல் இன்றைய உலகில் மனிதன் நினைத்தால் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் .வேண்டாம் என்றால் தவிர்க்க முடியும் .அப்போது பிறப்பு என்பதற்கும் கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் தொடர்புள்ளது என்று கூறுகிற ஆன்மீக கருத்துக்கள் தவறானவை ஆகும் .இன்னும் சில மதவாதிகள் பிறக்கின்ற எல்லா குழந்தைகளும் ஏன் நல்ல குழந்தைகளாக பிறப்பதில்லை .கூன்,குருடாக பிறக்கின்றன ,இதற்க்கெல்லாம் இறைவன் தான் காரணம் என்கிறார்கள் .
கர்பமான தாய் கர்ப்பமான முதல் முன்று மாதங்கள் தலைவலி மாத்திரை உண்டாலும் ,கர்ப்பத்தடை மாத்திரை உண்டாலும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றி குறையுடன் தான் பிறப்பார்கள் .இதில் கடவுளாக தாய்யல்லவா காட்சி தருகிறாள் .எனவே இதிலும் கடவுள் எங்கே வந்தார் .எனவே இயல்பாக எதிபாராமல் நடக்கின்ற நிகழ்சிகளுக்கு எல்லாம் கடவுள் காரணம் என்று கூறுவது அறிவுக்கு ஏற்றதன்று .
ஆனாலும் மரணத்தை பற்றிய தெளிவு நம்மில் பலருக்கு இருப்பதில்லை ,மரணத்தை துணிவோடு ஏற்றுகொள்கின்ற மனப்பக்குவம் வந்துவிட்டால் ,இறைவன் பற்றிய அறிவுக்கு ஏற்பில்லாத கருத்துக்களை கூறும்போது கேள்வி கேட்க மனம் துணியும் ,தெளியும் .ஆனால் நாம் மரண பயத்தை மனதிலே சுமந்து கொண்டு சாகாத பிணமாக வலம் வருவதால் அறிவுப்பூர்வமான கருத்துக்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை .2000 ஆண்டுகளுக்கு முன்பே நமது பாட்டன் திருவள்ளுவன் எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்தித்திருக்கின்றான் பாருங்கள் , "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு !"
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு "
நாம் தூங்கும் போது நாம் உயிரோடு இருக்கின்றோம் நம் நினைவுகள் ,ஆன்மா என கூறப்படுவன அனைத்தும் இருப்பதில்லை .நமது மூளை முற்றிலும் செயல் இழந்துவிடுகிறது ஆனால் தற்காலிகமானது .அதாவது மூளை தற்காலிகமாக செயல் இழந்துவிட்டால் அல்லது செயலை நிறுத்தி விட்டால் நாம் எந்த நினைவுகளும் இல்லாத மரண நிலையை அடைந்து விடுகின்றோம் .ஆனால் மரணம் என்று ஓன்று நிகழ்ந்து விட்டால் மூளை முற்றிலும் நிரந்தரமாக செயல் இழந்து விடுகிறது . எனவே "மூளை முற்றிலும் செயல் இழந்துவிட்டால் மரணம் ,தற்காலிகமாக செயல் இழந்தால் தூக்கம் " ,இதில் இறைவனுக்கோ ஆன்மாவிர்க்கோ, பரமாத்மாவிர்க்கோ தொடர்பு இல்லை என்பதை உணர்ந்து தெளிவு பெறுவோமாக !! .
எனவே மரண பயத்தை தவிர்த்து வாழும் போது வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக நாமே ஆகுவோம் அதை தான் வள்ளுவன்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் _வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் ."
என்று கூறுகிறார் .
No comments:
Post a Comment