அதே பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் போதுஇதே நண்பர் ராமமூர்த்தி அவர்கள் ,காலையில் என் உடன் பள்ளிக்கு வந்து விட்டு ,கட் அடித்து விட்டு எங்கோ சென்றுவிட்டார் .என்பக்கத்தில் தான் அவருக்கு இருக்கை. போகும் போது பள்ளி விட்டு வரும்போது புத்தக பையை எடுத்து வர சொல்லிவிட்டு சென்றுவிட்டார் . ஆசிரியர் வருகை பதிவு எடுக்கும் போது ராமமூர்த்தி எங்கே எனக்கேட்டார் ,"தெரியவில்லை ஐயா !பையை மட்டும் வைத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார்" என கூறினேன் .அவன் பையை எடுக்க வந்ததால் என்னிடம் கூறு என சொல்லிவிட்டு பாடம் எடுத்தார் .மற்ற வகுப்பு ஆசிரியர்களும் வந்து விட்டு சென்றார்கள் ,ஆனால் ராமமூர்த்தி மட்டும் வரவேயில்லை .மாலை வகுப்பு முடியும் நேரம் மனம் திக் திக் என்று அடித்துக்கொள்கிறது ,
நண்பன் புத்தக பையை எடுத்து வர சொல்லி இருக்கிறான் ,ஆசிரியர் பையை அவன் எடுக்க வந்ததால் சொல்ல சொல்லி இருக்கிறார் என்ன செய்வது என்றே தெரியவில்லை ,வகுப்பு எடுத்த ஆசிரியர் சென்று விட்டார் .பள்ளி விடுவதற்க்கான மணி அடிக்க போகிறது ,மனம் ஆசிரியருக்கு தெரியாமல் நண்பனின் பையை எடுத்து கொண்டு செல் என சொல்கிறது ,பயம் வேறு மனதை கவ்வி கொண்டது ,அந்த வகுப்பு ஆசிரியர் மிகவும் கடுமையானவர் ,காதை பிடித்து கிள்ளினார் என்றால் ரத்தம் வந்த பிறகுதான் விடுவார் .
பள்ளி மணி அடித்தது முதல் ஆளாக என்பையையும் நண்பனின் பையையும் எடுத்துகொண்டு வேகமாக ஓடுகிறேன் ........................................அப்போது எல்லாம் வாசல் படி மிக மொத்தமான மரத்தினால் உயரமாக இருக்கும் ,நான் ஓடிய வேகத்தில் அதை கவனிக்காமல் தடுத்து அதன் கிழே இருந்த படிக்கட்டுகளில் பலமாக விழுந்து,என் வலது கையின் மணிக்கட்டு முறிந்து விட்டது ,இன்றும் என் மணிக்கட்டு வளைந்து இருப்பதை பார்க்கும் போது பள்ளி வராமல் கட் அடித்து சென்ற ராமமூர்த்தியும் ,பிறகு அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதும் பிறகு அவனே ரவுடியாகி என்னிடமே மோதி அவனை கையை கட்டி அடித்து இழுத்து வந்தது பிறகு அவன் தூக்கு மாட்டி இறந்து போனது ,அது தனி கதை ,அது பிறகு .............................
நண்பன் புத்தக பையை எடுத்து வர சொல்லி இருக்கிறான் ,ஆசிரியர் பையை அவன் எடுக்க வந்ததால் சொல்ல சொல்லி இருக்கிறார் என்ன செய்வது என்றே தெரியவில்லை ,வகுப்பு எடுத்த ஆசிரியர் சென்று விட்டார் .பள்ளி விடுவதற்க்கான மணி அடிக்க போகிறது ,மனம் ஆசிரியருக்கு தெரியாமல் நண்பனின் பையை எடுத்து கொண்டு செல் என சொல்கிறது ,பயம் வேறு மனதை கவ்வி கொண்டது ,அந்த வகுப்பு ஆசிரியர் மிகவும் கடுமையானவர் ,காதை பிடித்து கிள்ளினார் என்றால் ரத்தம் வந்த பிறகுதான் விடுவார் .
பள்ளி மணி அடித்தது முதல் ஆளாக என்பையையும் நண்பனின் பையையும் எடுத்துகொண்டு வேகமாக ஓடுகிறேன் ........................................அப்போது எல்லாம் வாசல் படி மிக மொத்தமான மரத்தினால் உயரமாக இருக்கும் ,நான் ஓடிய வேகத்தில் அதை கவனிக்காமல் தடுத்து அதன் கிழே இருந்த படிக்கட்டுகளில் பலமாக விழுந்து,என் வலது கையின் மணிக்கட்டு முறிந்து விட்டது ,இன்றும் என் மணிக்கட்டு வளைந்து இருப்பதை பார்க்கும் போது பள்ளி வராமல் கட் அடித்து சென்ற ராமமூர்த்தியும் ,பிறகு அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதும் பிறகு அவனே ரவுடியாகி என்னிடமே மோதி அவனை கையை கட்டி அடித்து இழுத்து வந்தது பிறகு அவன் தூக்கு மாட்டி இறந்து போனது ,அது தனி கதை ,அது பிறகு .............................
No comments:
Post a Comment