நாவல் மரம்
பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் போது,எனது நண்பர் [அப்போது ]ராமமூர்த்தி எங்கள் தெரு நண்பர் ,பள்ளிக்கு ஒன்றாகவே செல்வோம் ,ஒன்றாகவே வருவோம் !மதிய இடைவேளையில் சாப்பிட்டு விட்டு ,பல்கலைகழக விளையாட்டு திடலில் இருக்கும் நாவல் மரத்தில் பழம் பறித்து தின்பது வழக்கம் !அந்த மதிய நேரத்தில் தான் காவலர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் !நாங்கள் மட்டும் அல்ல பள்ளியே அங்கே தான் இருக்கும் !மரத்தில் உச்சில் யார் ஏறுகிறார்களோ அவர்களுக்கு தான் பழம் கிட்டும் .இதில் உச்சியில் ஏறி பறிப்பதில் நான் தான் கெட்டி .
நண்பனை கிழே இருக்க விட்டு மரத்தின் உச்சிகிளையை நோக்கி ஏறிகொண்டிருக்கின்றேன்.மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கிழே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் !ஒற்றை கிளை எந்த பிடிமானமும் இல்லாமல் தனியாக படர்ந்து இருக்கிறது இது வரை யாரும் அந்த கிளைக்கு சென்றதே இல்லை அதனால் நிறைய பழம்!கொத்துகொத்தாய் தொங்குகிறது !உலுக்கினால் கிழே விழுந்து நசுங்கி மண்ணாகி சாப்பிட முடியாது !ஒரு பையை எடுத்துக்கொண்டு ஏறி விட்டேன் பைநெறைய பழம் !கிழே விழுந்ததால் .......................................
40 அடி உயர மரம் ....நினைக்கவே இப்போது பயமாக இருக்கிறது ,ஆனால் அப்போ இளம் கன்று எந்த பயமும் இல்லை !கிழே பார்க்கிறேன் திடிரென மாணவர்கள் சிதறி ஓடுகிறார்கள் !நண்பன் கிழே இருந்தது ,"டேய் !வாட்ச்மேன்டா! "என்று அலற நான் வேகமாக கிளையில் அழுத்தம் கொடுத்து ஏற மள மள என கிளை முறிய ........................................ இதோடு நமது வாழ்க்கை முடிந்ததது என்று எண்ணிவிட்டேன் .மரக்கிளை முறிந்து நாவல் மரத்தின் நாரில் மரக்கிளையும் நானும் தொங்குகின்றோம்.மெதுவாக ஏறி மரத்தின் மற்றொரு மரக்கிளைக்கு வந்த போதுதான் உயிரே வந்தது .அப்போதுதான் தெரிந்து கொண்டேன் நாவல் மரத்தின் கிளையை விட அதன் பட்டை வலுவானது என்று ,பலநாட்கள் நான் மீண்டும் அங்கு செல்லும்போது கிளை இலை எல்லாம் காய்ந்த பிறகும் பட்டையில் அந்த மரக்கிளை நீண்ட நாட்கள் தொங்கி கொண்டு இருந்த்தது .அதை நினைத்தால் இன்றும் அந்த மரப்பட்டை எனக்கு தெய்வமாக தெரியும் .
நண்பனை கிழே இருக்க விட்டு மரத்தின் உச்சிகிளையை நோக்கி ஏறிகொண்டிருக்கின்றேன்.மாணவர்கள் 50 க்கும் மேற்பட்டவர்கள் கிழே நின்று வேடிக்கை பார்க்கிறார்கள் !ஒற்றை கிளை எந்த பிடிமானமும் இல்லாமல் தனியாக படர்ந்து இருக்கிறது இது வரை யாரும் அந்த கிளைக்கு சென்றதே இல்லை அதனால் நிறைய பழம்!கொத்துகொத்தாய் தொங்குகிறது !உலுக்கினால் கிழே விழுந்து நசுங்கி மண்ணாகி சாப்பிட முடியாது !ஒரு பையை எடுத்துக்கொண்டு ஏறி விட்டேன் பைநெறைய பழம் !கிழே விழுந்ததால் .......................................
40 அடி உயர மரம் ....நினைக்கவே இப்போது பயமாக இருக்கிறது ,ஆனால் அப்போ இளம் கன்று எந்த பயமும் இல்லை !கிழே பார்க்கிறேன் திடிரென மாணவர்கள் சிதறி ஓடுகிறார்கள் !நண்பன் கிழே இருந்தது ,"டேய் !வாட்ச்மேன்டா! "என்று அலற நான் வேகமாக கிளையில் அழுத்தம் கொடுத்து ஏற மள மள என கிளை முறிய ........................................ இதோடு நமது வாழ்க்கை முடிந்ததது என்று எண்ணிவிட்டேன் .மரக்கிளை முறிந்து நாவல் மரத்தின் நாரில் மரக்கிளையும் நானும் தொங்குகின்றோம்.மெதுவாக ஏறி மரத்தின் மற்றொரு மரக்கிளைக்கு வந்த போதுதான் உயிரே வந்தது .அப்போதுதான் தெரிந்து கொண்டேன் நாவல் மரத்தின் கிளையை விட அதன் பட்டை வலுவானது என்று ,பலநாட்கள் நான் மீண்டும் அங்கு செல்லும்போது கிளை இலை எல்லாம் காய்ந்த பிறகும் பட்டையில் அந்த மரக்கிளை நீண்ட நாட்கள் தொங்கி கொண்டு இருந்த்தது .அதை நினைத்தால் இன்றும் அந்த மரப்பட்டை எனக்கு தெய்வமாக தெரியும் .
No comments:
Post a Comment