Tuesday, 5 July 2011

வேலியே நீ பயிரை மேயலாமா?


வேலியே நீ பயிரை மேயலாமா?
நடுத்தெருவில் நாயினும் கீழாய் காவல்துறை.கண்ணுற்றபோது கலங்காமல் இருக்கமுடியவில்லை.காக்க வேண்டிய காவல்துறையே குடிபோதையில் கலாட்டா செய்தால் மரியாதை அவர்கள் மீது எப்படி வரும்.காதலனை ஏமாற்றி கல்லூரி மாணவியை கடத்திய திருச்சி இன்ஸ்பெக்டர் கைது இது இன்றைய செய்தி,இதுபோல்.......*லாக்கப்பில் அடித்து மரணம்,*காவல் நிலயத்திலேயே கற்பழிப்பு *காவல் நிலயத்திலேயே கட்டபஞ்சாயத்து *
இப்படி தினம் ஒரு செய்தி வருகிறதே இதை தடுப்பது எப்படி என்று ஆட்சியாளர்கள் ஒருகணமாவது சிந்தித்ததுண்டா? இதோடு இணைத்துள்ள கானொலியை பாருங்கள் ஒரு பெண் போலிஸ் ஒரு பத்திரிக்கைகாரர் காலில் விழுவதை .இப்படி மதிக்க வேண்டிய காவல்துறை கண்டவர் கால்களில் மிதிபடுகிறதே,நல்லவர்களாக இருப்பவர்கள் உள்ளம் அதை கண்டு வேதனைபடுகிறதே! ஆட்சியாளர்களளே! இதை மாற்ற நடவடிக்கை எடுங்கள் . காவல் துறையின் புகழை காப்பாற்றுங்கள். தனிமனித ஒழுக்கம் உள்ளவர்களை மட்டும் காவல் துறையில் பணியாற்ற அனுமதியுங்கள் .புகை பழக்கம் இருந்தால் கூட நியமிக்காதீர்கள். நியமித்த பிறகு செய்தால் என்ன செய்வது ? என நீங்கள் கேட்பது புரிகிறது, தயவு தாட்சணயம் காட்டாதீர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யுங்கள் அப்போதுதான் காவல் துறை மீதான மதிப்பு உயரும்http://vizhippuulagam.blogspot.com/ Hmmmm Hmmmm Hmmmm Hmmmm Hmmmm

No comments:

Post a Comment